செய்திகள்
பிரதமர் மோடி

உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட்டுள்ளது - பிரதமர் மோடி

Published On 2019-07-17 16:02 GMT   |   Update On 2019-07-17 16:02 GMT
குல்பூஷன் ஜாதவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்ற தடை விதித்து சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.
புதுடெல்லி:

குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும். ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

இதற்கிடையே, ஜாதவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்ற தடை விதித்து சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மகாராஷ்டிராவில் உள்ள அவரது கிராமத்தினர் வண்ண வண்ண பலூன்களை பறக்கவிட்டும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ந்தனர்.

இந்நிலையில், குல்பூஷன் ஜாதவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்ற தடை விதித்து சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது. குல்பூஷண் ஜாதவுக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன். உண்மைகளை விரிவாக ஆய்வு செய்து தீர்ப்பளித்த சர்வதேச நீதிமன்றத்திற்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News