செய்திகள்
சீரடி கோயிலில் எம்எல்ஏ ரமேஷ் ஜர்க்கிஹோலி

கர்நாடகத்தை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சீரடியில் தரிசனம்

Published On 2019-07-13 09:46 GMT   |   Update On 2019-07-13 09:46 GMT
கர்நாடக மாநில அரசுக்கு அதிருப்தி தெரிவித்து ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் 14 பேரும் இன்று சீரடி சாய்பாபா கோயிலில் தரிசனம் செய்தனர்.
மும்பை:

கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்  மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர்.

அவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் இன்னும் ஏற்காத நிலையில் ராஜினாமா செய்த அனைவரும் மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள ஓட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.



இந்நிலையில், அவர்கள் 14 பேரும் இன்று மும்பையில் இருந்து சுமார் 260 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சீரடி நகருக்கு சென்றனர். அங்குள்ள சாய்பாபா கோயிலில் அவர்கள் கூட்டாக தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News