செய்திகள்
பிரியங்கா காந்தி

உ.பி.யில் சுதந்திரமாக சுற்றித்திரியும் கிரிமினல்கள் - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

Published On 2019-06-29 10:02 GMT   |   Update On 2019-06-29 10:02 GMT
உத்தரப்பிரதேசத்தில் கிரிமினல்கள் சுதந்திரமாக சுற்றித்திரிவதாக குற்றம்சாட்டியுள்ள பிரியங்கா காந்தி அம்மாநில அரசு கிரிமினல்களிடம் சரணடைந்து விட்டதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநில (கிழக்கு) காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள பிரியங்கா காந்தி அம்மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருவது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று கருத்து தெரிவித்துள்ளார்.

‘உத்தரப்பிரதேசம் மாநிலம் முழுவதும் கிரிமினல்கள் சுதந்திரமாக சுற்றித்திரிகின்றனர். அவர்கள் விரும்பியதை எல்லாம் செய்து வருகின்றனர். தொடர்ந்து குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.



ஆனால், அங்கு ஆட்சி செய்யும் யோகி ஆதித்யாநாத் தலைமையிலான மாநில அரசின் செவிட்டு காதுகளில் இது விழவில்லை. கிரிமினல்களிடம் அம்மாநில அரசு சரணடைந்து விட்டதா?’ என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
Tags:    

Similar News