செய்திகள்
நடத்தையில் சந்தேகம் - மனைவியின் தலையை துண்டித்து கையில் தூக்கி வந்த தொழிலாளி
மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர் அவரது தலையை துண்டித்து கையில் எடுத்து வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீகாளஹஸ்தி:
ஸ்ரீகாளஹஸ்தி அடுத்த கலகடா பகுதியை சேர்ந்தவர் உசேன், கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி அம்மாஜி, இவருக்கும் மற்றொரு நபருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
மனைவியின் நடத்தையில் உசேனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதேபோல் நேற்றும் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
கதிராயசொருவு அருகே அழைத்து சென்ற உசேன், அம்மாஜியின் தலையை வெட்டி துண்டித்தார். ரத்தம் சொட்ட சொட்ட துண்டிக்கப்பட்ட தலையை கையில் எடுத்துக்கொண்டு நேராக கலகடா போலீசுக்கு வந்து சரணடைந்தார்.
இதையடுத்து உசேனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீகாளஹஸ்தி அடுத்த கலகடா பகுதியை சேர்ந்தவர் உசேன், கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி அம்மாஜி, இவருக்கும் மற்றொரு நபருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
மனைவியின் நடத்தையில் உசேனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதேபோல் நேற்றும் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
கதிராயசொருவு அருகே அழைத்து சென்ற உசேன், அம்மாஜியின் தலையை வெட்டி துண்டித்தார். ரத்தம் சொட்ட சொட்ட துண்டிக்கப்பட்ட தலையை கையில் எடுத்துக்கொண்டு நேராக கலகடா போலீசுக்கு வந்து சரணடைந்தார்.
இதையடுத்து உசேனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.