செய்திகள்

ஆந்திராவில் குழந்தைகள் கடத்தி விற்பனை செய்த கும்பல் சிக்கியது

Published On 2019-04-25 04:28 GMT   |   Update On 2019-04-25 04:28 GMT
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் பல்வேறு இடங்களில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்து வந்த, 4 பெண்கள் உட்பட 7 பேர் கொண்ட கடத்தல் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். #AndraChildrenKidnaped
ஐதராபாத்:

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து குழந்தைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து ஐதராபாத் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர சோதனை மற்றும் கடத்தல் கும்பலை கண்டுபிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இதையடுத்து தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதலில், கடத்தல் கும்பலின் முக்கிய குற்றவாளி கங்காதர ரெட்டி மற்றும் 4 பெண்கள் உட்பட 7 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.  அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒரு மாத பெண் குழந்தை,  மற்றும் இரண்டரை வயதுடைய 2 ஆண் குழந்தைகள் கடத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த குழந்தைகளை ஐதராபாத்தில் குண்டூர் பகுதியில் உள்ள வெவ்வேறு இடங்களில் கடத்தியுள்ளனர்.  குழந்தைகள் இல்லா தம்பதிகளுக்கு ரூ.2.5 லட்சம், ரூ.3.10 லட்சத்திற்கு விற்றுள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து மீட்கப்பட்ட 3 குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட 7 பேரிடமும் மேலும் இந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #AndraChildrenKidnaped  

Tags:    

Similar News