செய்திகள்

கள்ளக்காதல் மோகத்தில் கர்ப்பிணி மனைவியை திட்டமிட்டுக் கொன்ற கணவன்

Published On 2019-03-27 08:29 GMT   |   Update On 2019-03-27 08:29 GMT
பஞ்சாப் மாநிலத்தில் கள்ளக்காதல் மோகத்தினால், கணவர் தன் கர்ப்பிணி மனைவியை திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #punjabwomankilled
ராய்ப்பூர்:

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண் ரவ்னீத் கவுர் ஆவார். இவர் கடந்த மார்ச் 14ம் தேதி பிரசவத்திற்காக பஞ்சாப்பில் உள்ள அவரது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். அன்றிரவு வீட்டின் உள்ளே இருந்து செல்போனில் கணவர் ஜஸ்பிரீத்துடன்  வீடியோ காலில் பேசிக் கொண்டே வெளியே வந்துள்ளார். அப்போது அவரை யாரோ கடத்தியுள்ளனர்.

இதையடுத்து அவரது அண்ணன் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, காணாமல் போன பெண்ணை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அப்பெண்ணின் சடலம் பெரோசிபூர் மாவட்டத்தின் பக்ரா பகுதியில் உள்ள வடிகாலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அப்பெண்ணின் மரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இது திட்டமிட்டு நடந்த கொலை என தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ‘ரன்வீத்தின் கணவர் ஜஸ்பிரீத்திற்கு ஆஸ்திரேலியாவில் கிரண்ஜீத் கவுர் எனும் திருமணமான பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால் மனைவி மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. அவரை கொல்ல திட்டமிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் கொன்றால் சந்தேகம் ஏற்பட்டு விடும் என்பதற்காக, பஞ்சாப்பிற்கு வந்ததை பயன்படுத்திக் கொண்டுள்ளான். ஜஸ்பிரீத், மனைவியைக் கொல்ல கிரண்ஜீத்தை அனுப்பி வைத்துள்ளான்.

கிரண்ஜீத் தன் தங்கை மற்றும் உறவினருடன் இணைந்து ரவ்னீத்தை கடத்திச் சென்று கொன்று, வடிகாலில் வீசியுள்ளார். இதையடுத்து கணவர் ஜஸ்பிரீத் கவுர், கிரண்ஜீத் கவுர், டிரண்ஜீத் கவுர் மற்றும் சந்தீப் சிங் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது’ என தெரிவித்துள்ளனர். #punjabwomankilled

 



 
Tags:    

Similar News