செய்திகள்

கடும் வெயில் எதிரொலி: காலை 6.30 மணிக்கு பள்ளிகளை திறக்க ஒடிசா அரசு உத்தரவு

Published On 2019-03-24 05:53 GMT   |   Update On 2019-03-24 05:53 GMT
கடும் வெயிலால் பள்ளி மாணவ மாணவிகள் பாதிக்கப்படுவதால் காலையில் 6.30 மணிக்கு பள்ளிகளை திறக்க ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் வழக்கத்திற்கு முன்பாகவே கோடைக்காலம் தொடங்கிவிட்டது. இதனால் பள்ளிக்கூடம் செல்லும் மாணவ மாணவிகள் வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

தற்போது இறுதித் தேர்வு நடைபெற்ற வருவதால் பெரும்பாலான வகுப்புகள் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடத்தப்படுகின்றன. இதனால் மாணவ மாணவிகள் உச்சி வெயிலில் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

இதனால் வரும் 2-ந்தேதியில் இருந்து காலை 6.30 மணிக்கு பள்ளிகளில் பாடங்களை தொடங்க வேண்டும் என்று ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News