செய்திகள்

மசூதிகளை கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் - தேர்தல் கமிஷனுக்கு டெல்லி பாஜக வலியுறுத்தல்

Published On 2019-03-16 14:09 GMT   |   Update On 2019-03-16 14:09 GMT
பாராளுமன்ற தேர்தலில் மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் அரசியல், மதத்தலைவர்களை கண்காணிப்பதற்கு சிறப்பு பார்வையாளர்களை நியமிக்குமாறு தேர்தல் கமிஷனை டெல்லி பாஜக வலியுறுத்தியுள்ளது. #DelhiBJP #DelhiEC
புதுடெல்லி:

தேர்தல் காலங்களில் மத வழிப்பாட்டுத்தலங்களில் அரசியல் பிரமுகர்கள் வாக்கு வேட்டையாட செல்வதுண்டு. குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமைகளில் கிறிஸ்தவ தேவாலயங்களில் அதிகமான மக்கள் கூடும் வேளைகளிலும், வெள்ளிக்கிழமையன்று மசூதிகளில் நடைபெறும் ’ஜும்மா’ சிறப்பு தொழுகையின்போதும் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பதுண்டு.

சில பகுதிகளில் மசூதிக்கு வருபவர்கள் இந்த வேட்பாளருக்குதான் வாக்களிக்க வேண்டும் என மதத்தலைவர்கள் பிரசாரம் செய்ததாகவும் முன்னர் செய்திகள் வெளியாகின.



இந்நிலையில், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் வாக்கு சேகரிக்கும் அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் மற்றும் மதத்தலைவர்களை கண்காணிப்பதற்கு சிறப்பு பார்வையாளர்களை நியமிக்குமாறு தேர்தல் கமிஷனை டெல்லி பாஜக இன்று வலியுறுத்தியுள்ளது.

குறிப்பாக, முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இத்தகைய கண்காணிப்பு மிகவும் அவசியம் என டெல்லி தேர்தல் கமிஷனுக்கு இன்று அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. #DelhiBJP #DelhiEC #SpecialObserver 
Tags:    

Similar News