செய்திகள்
சபரிமலை கோவிலுக்கு தங்கத்தில் புதிய கதவு - பக்தர்கள் காணிக்கையாக வழங்கினர்
சபரிமலை கோவிலுக்கு தேக்கில் செய்து, தங்கத்தகடு பதிக்கப்பட்ட கதவு ஒன்றை பக்தர்கள் காணிக்கையாக வழங்கினர். #SabarimalaTemple #GoldPlatedDoor
திருவனந்தபுரம்:
சபரிமலை அய்யப்பன் கோவில் கருவறையில் பொருத்தப்பட்டு இருந்த கதவில் விரிசல் ஏற்பட்டு இருந்தது. எனவே அதற்கு பதிலாக புதிய கதவு பொருத்த தேவஸ்தானம் முடிவு செய்தது. இதற்காக தேவபிரசன்னமும் பார்க்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சபரிமலை கோவிலுக்கு தங்க கதவு ஒன்றை காணிக்கையாக வழங்க பக்தர்கள் முன்வந்தனர். அதன்படி உயர்தர தேக்கில் செய்து, தங்கத்தகடு பதிக்கப்பட்ட கதவு ஒன்றை தற்போது அவர்கள் வழங்கி உள்ளனர். இந்த கதவில் 4 கிலோ எடை கொண்ட தங்கத்தகடு பதிக்கப்பட்டு உள்ளது.
சபரிமலையில் மாதாந்திர பூஜைக்காக வருகிற 11-ந்தேதி நடை திறக்கப்படுகிறது. அன்றைய தினமே இந்த கதவு பொருத்தப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
சபரிமலை அய்யப்பன் கோவில் கருவறையில் பொருத்தப்பட்டு இருந்த கதவில் விரிசல் ஏற்பட்டு இருந்தது. எனவே அதற்கு பதிலாக புதிய கதவு பொருத்த தேவஸ்தானம் முடிவு செய்தது. இதற்காக தேவபிரசன்னமும் பார்க்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சபரிமலை கோவிலுக்கு தங்க கதவு ஒன்றை காணிக்கையாக வழங்க பக்தர்கள் முன்வந்தனர். அதன்படி உயர்தர தேக்கில் செய்து, தங்கத்தகடு பதிக்கப்பட்ட கதவு ஒன்றை தற்போது அவர்கள் வழங்கி உள்ளனர். இந்த கதவில் 4 கிலோ எடை கொண்ட தங்கத்தகடு பதிக்கப்பட்டு உள்ளது.
சபரிமலையில் மாதாந்திர பூஜைக்காக வருகிற 11-ந்தேதி நடை திறக்கப்படுகிறது. அன்றைய தினமே இந்த கதவு பொருத்தப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.