செய்திகள்

கன்னியாகுமரி லாட்ஜில் மாணவி கற்பழிப்பு- கேரள வாலிபர் கைது

Published On 2019-02-01 05:06 GMT   |   Update On 2019-02-01 05:06 GMT
கன்னியாகுமரி லாட்ஜில் மாணவியை கற்பழித்தது தொடர்பாக கேரள வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் வர்க்கலாவை அடுத்த அயிரூர் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார்.

மாணவியின் பெற்றோர் அவரை பல இடங்களிலும் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் மாணவியை கண்டு பிடிக்க முடியவில்லை. தோழிகளிடம் விசாரித்த போது மாணவிக்கும் பரவலூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

பெற்றோர் அந்த வாலிபரை தேடிச் சென்ற போது அவரும் மாயமாகி இருந்தார். இதையடுத்து வாலிபர் தான் மாணவியை கடத்திச் சென்றிருக்கலாம் என்று பெற்றோர் கருதினர். இது பற்றி வர்க்கலா போலீசிலும் புகார் செய்தனர்.

வர்க்கலா போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியையும், வாலிபரையும் தேடி வந்தனர். அவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் வாலிபர் சிக்கினார்.

அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் நியாஸ்(வயது22) என தெரிய வந்தது. மாணவிக்கு திருமண ஆசை காட்டி வெளியூருக்கு கடத்திச் சென்றதும், கன்னியாகுமரி, கோழிக்கோடு ஊர்களில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கி மாணவியை கற்பழித்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து வர்க்கலா போலீசார் வாலிபர் நியாசை கைது செய்தனர். அவர் மீது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு பதிவு செய்தனர்.

வாலிபரின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட மாணவி, மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News