செய்திகள்

ஒடிசாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து-2 பேர் பலி, 30 பேர் படுகாயம்

Published On 2019-01-28 08:31 GMT   |   Update On 2019-01-28 08:31 GMT
ஒடிசாவில் உள்ள காலஹண்டில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர். 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். #Odishabusaccident
காலஹண்ட்:

ஒடிசாவின் காலஹண்ட் மாவட்டம், கேசிங்கா பகுதிக்கு அருகே இன்று காலை பயணிகள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பேருந்தில் சுமார் 40 பேர் பயணம் செய்துள்ளனர். இப்பகுதியில் உள்ள ஒரு வளைவில் திருப்ப முற்பட்டபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்த பேருந்து, சாலையோரம் கவிழ்ந்தது .

இதில் 2 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு, அருகிலுள்ள  மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து விபத்து குறித்த விசாரணையில் அப்பகுதி காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  

இதேபோல் ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் பள்ளி வாகனம் ஒன்று சாலையின் வளைவில் திரும்ப முற்படும்போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 15 மாணவர்கள் படுகாயமுற்றனர். மேலும் 2 பேர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Odishabusaccident





Tags:    

Similar News