செய்திகள்
பிரதமரின் பொதுக்கூட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்தது- 35 மாணவர்கள் காயம்
இமாச்சலப் பிரதேசத்தில் பிரதமரின் பொதுக்கூட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 35 மாணவர்கள் காயமடைந்தனர்.#HPAccident #BusOverturned
ஷிம்லா:
இமாச்சல பிரதேசத்தில் பாஜக அரசின் ஓராண்டு நிறைவையொட்டி தரம்சாலாவில் இன்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தனியார் கம்ப்யூட்டர் சென்டரில் படிக்கும் மாணவர்கள் ஒரு பஸ்சில் அழைத்து செல்லப்பட்டனர்.
இந்த பஸ், கங்ரா மாவட்டம் ஜவாலி பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சிறிது நேரத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 35 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. #HPAccident #BusOverturned