செய்திகள்

டெல்லி தொழிற்சாலை தீவிபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு

Published On 2018-11-19 09:49 GMT   |   Update On 2018-11-19 09:49 GMT
டெல்லி கரோல்பாக் பகுதி அருகேயுள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று தீவிபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். #KarolBaghfactoryfire #fourdead
புதுடெல்லி:

டெல்லியின் மத்திய பகுதியான கரோல்பாக் அருகேயுள்ள பீடோன்புரா என்னும் இடத்தில் வீடுகளுக்கு இடையில் இயங்கிவந்த  ஒரு தொழிற்சாலையில் இன்று  பிற்பகல் சுமார் 12.30 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்து இரு வாகனங்களில் விரைந்துவந்த தீயணைப்பு படையினர், தீயை அணைத்து, உடல் கருகி கிடந்த 4 பிரேதங்களை கண்டெடுத்தனர்.


இவ்விபத்தில் இறந்தவர்கள் பகன் பிரஷாத்(55), நரேஷ்(40), ஆஷா(40), ஆர்த்தி(20) என தெரியவந்துள்ளது. இந்த விபத்துக்கான காரணம் தொடர்பாக கரோல்பாக் போலீசார் விசாரித்து வருகின்றனர். #KarolBaghfactoryfire #fourdead
Tags:    

Similar News