செய்திகள்

மும்பை அருகே அரசு உயரதிகாரிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்தது - ஒருவர் மாயம்

Published On 2018-10-24 13:43 GMT   |   Update On 2018-10-24 13:43 GMT
மும்பை அருகே இன்று மகாராஷ்டிரா மாநில தலைமை செயலாளர், உயரதிகாரிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் பலர் மீட்கப்பட்டனர். காணாமல்போன ஒருவரை தேடும் பணி நடந்து வருகிறது. #Mumbaiboatcapsize #ShivajiSmarakboatcapsize
மும்பை:

மும்பை நகரில் இன்று மாலை மகாராஷ்டிரா அரசுக்கு சொந்தமான ஒரு படகில் அம்மாநில தலைமை செயலாளர் மற்றும் உயரதிகாரிகள் கடலில் சென்று கொண்டிருந்தனர். நாரிமன் பாயின்ட் பகுதியில் இருந்து சுமார் 2.6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிவாஜி ஸ்மரக் அருகே இன்று மாலை அந்த படகு கடலில் கவிழ்ந்தது.

தகவல் அறிந்து விரைந்துவந்த கடலோர காவல் படையினர் இந்த விபத்தில் சிக்கி கடலில் தத்தளித்த பலரை ஹெலிகாப்டர்கள் உதவியுடன் பத்திரமாக மீட்டனர். காணாமல்போன ஒருவரை தேடும் பணி நடந்து வருகிறது.

துரதிர்ஷ்டவசமான இந்த விபத்து தொடர்பாக விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அம்மாநில மந்திரி வினோத் டாவ்டே தெரிவித்துள்ளார். #Mumbaiboatcapsize  #ShivajiSmarakboatcapsize
Tags:    

Similar News