செய்திகள்

தாலாட்டு பாடி யானையை தூங்க வைக்கும் பாகன்- வீடியோ

Published On 2018-10-22 10:44 GMT   |   Update On 2018-10-22 10:44 GMT
கேரளாவைச் சேர்ந்த பாகன் ஒருவர் தாலாட்டு பாடி யானையை தூங்க வைக்கும் வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. #KeralaMahout #Lullaby
திருவனந்தபுரம்:

குழந்தைகளுக்கு தாய்மார்கள் தாலாட்டு பாடியும், குட்டிக் கதைகள் சொல்லியும் தூங்க வைப்பது வழக்கம். இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, குழந்தைகள் போல் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கும் பொருந்தும் என சொல்லியிருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த பாகன்.

திரிச்சூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ குமார் வளர்த்து வரும் யானை பாஸ்டியன் வினய்சுந்தர் கடந்த சில தினங்களுக்கு முன் மிகவும் சோர்வாக காணப்பட்டது. ஆனால் தூங்க முடியாமல் தவித்தது. யானைக்கு ஓய்வு தேவை என்பதை உணர்ந்த பாகன் ஸ்ரீகுமார், படுத்துக் கிடந்த யானையின் அருகே சென்று அமர்ந்தார்.

பின்னர் யானையை தடவிக் கொடுத்தபடி, மலையாள மொழியில் தாலாட்டு பாடினார். இந்த தாலாட்டில் மெய்மறந்த யானை கொஞ்சம் கொஞ்சமாக கண் அயர்ந்து தூங்க ஆரம்பிக்கிறது. அவர் தாலாட்டு பாடி யானையை தூங்க வைக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

பாடகர் மற்றும் மிமிக்ரி கலைஞரான ஸ்ரீ குமார், பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #KeralaMahout #Lullaby


Tags:    

Similar News