செய்திகள்

இந்தியா நேபாள எல்லையில் நிலநடுக்கம் - பொதுமக்கள் அச்சம்

Published On 2018-10-05 15:41 GMT   |   Update On 2018-10-05 15:41 GMT
இந்தியா மற்றும் நேபாள எல்லைப்பகுதியில் இன்று 4.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்தனர். #Earthquake #IndiaNepalBorder
புதுடெல்லி:

இந்தியா - நேபாளம் எல்லைப்பகுதியில் உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று மதியம் 12.45 மணியளவில் 4.5 ரிக்டர் அளவு கொண்ட மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தை இந்திய நிலநடுக்கவியல் மையம் (என்சிஎஸ்) உறுதி செய்துள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

இந்திய புவியியல் அறிவியல் அமைச்சகம் கீழ் இயங்கும் என்.சி.எஸ், 4.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 33 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டது என தெரிவித்துள்ளது. #Earthquake #IndiaNepalBorder
Tags:    

Similar News