செய்திகள்

கேரளாவில் காந்தி சிலை அடித்து நொறுக்கிய வாலிபர் கைது

Published On 2018-09-28 11:46 GMT   |   Update On 2018-09-28 11:46 GMT
கேரளாவில் காந்தி சிலையை அடித்து நொறுக்கி தப்பி ஓட முயன்ற பீகார் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் கொச்சி கச்சேரிபடியில் காந்தி சதுக்கம் உள்ளது. இந்த சதுக்கத்தில் காந்தி அமைதி பவுண்டே‌ஷன் சார்பில் காந்தி சிலை நிறுவப்பட்டது. இந்த பவுண்டே‌ஷனில் நீதிபதிகள், வக்கீல்கள், டாக்டர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொறுப்பாளர்களாக உள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை காந்தி சிலை அருகே வந்த ஒரு வாலிபர் காந்தி சிலையை அடித்து நொறுக்கினார். இது குறித்து பவுண்டே‌ஷன் பொறுப்பாளர்களுக்கு தெரியவந்ததும் அவர்கள் உடனே சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் வருவதை பார்த்த வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

இது குறித்து கொச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அங்கு பொருத்தப்பட்டிருந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதனை வைத்து வாலிபரை தேடிய போது அவர் அதே பகுதியில் மறைந்திருந்தார். அவரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த தீபசென்ரல் (வயது 32) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

காந்தி சிலையை உடைத்து சேதப்படுத்தியது ஏன் என்று தீபசென்ரலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News