செய்திகள்

ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவுக்கு எதிராக அப்பீல்- அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

Published On 2018-09-04 07:15 GMT   |   Update On 2018-09-04 07:15 GMT
ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.#NGTSterliteCommittee #SupremeCourt
புதுடெல்லி:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு தடை விதித்ததை எதிர்த்து ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது.

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவில் தலைவராக ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தருண் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.



பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை அவசர வழக்காக நாளையே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு தரப்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது. #NGTSterliteCommittee #SupremeCourt
Tags:    

Similar News