செய்திகள்
பா.ஜ.க ஆட்சியில் வழங்கப்பட்ட வாராக்கடன்கள் எத்தனை? - பிரதமருக்கு ப.சிதம்பரம் கேள்வி
வாராக்கடன்கள் அனைத்தும் காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்டது என்ற மோடியின் குற்றச்சாட்டுக்கு முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார். #Chidambaram #Modi
புதுடெல்லி:
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியில்தான் முறையின்றி வங்கிகடன்கள் அதிகம் வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். அதற்கு தனது ட்விட்டர் மூலம் பதிலடி கொடுத்துள்ள முன்னாள் நிதிமந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம், 2014-ம் ஆண்டுக்கு பிறகு வழங்கப்பட்ட வங்கிகடன்களில் வாராக்கடன்கள் எத்தனை? என்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், பாராளுமன்றத்திலேயே இந்த கேள்வியை எழுப்பியதாகவும், அதற்கு மோடி பதலளிக்கவில்லை எனவும் ப.சிதம்பரம் சாடியுள்ளார்.
முந்தைய ஆட்சியில்தான் முறையற்ற வங்கிக்கடன்கள் அளிக்கப்பட்டதாக கூறும் மோடி, அவற்றை திரும்ப பெற ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். #Chidambaram #Modi
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியில்தான் முறையின்றி வங்கிகடன்கள் அதிகம் வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டினார். அதற்கு தனது ட்விட்டர் மூலம் பதிலடி கொடுத்துள்ள முன்னாள் நிதிமந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம், 2014-ம் ஆண்டுக்கு பிறகு வழங்கப்பட்ட வங்கிகடன்களில் வாராக்கடன்கள் எத்தனை? என்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், பாராளுமன்றத்திலேயே இந்த கேள்வியை எழுப்பியதாகவும், அதற்கு மோடி பதலளிக்கவில்லை எனவும் ப.சிதம்பரம் சாடியுள்ளார்.
முந்தைய ஆட்சியில்தான் முறையற்ற வங்கிக்கடன்கள் அளிக்கப்பட்டதாக கூறும் மோடி, அவற்றை திரும்ப பெற ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். #Chidambaram #Modi