செய்திகள்

சித்தூர் அருகே 5 செம்மரங்களுடன் 2 பேர் கைது

Published On 2018-09-01 10:35 GMT   |   Update On 2018-09-01 10:35 GMT
சித்தூர் மாவட்டம் பாக்ராபேட்டை அருகே 5 செம்மரங்களுடன் 2 பேரை கைது செய்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பைகளையும் பறிமுதல் செய்தனர். #RedSandersSmuggling
ஸ்ரீகாளஹஸ்தி:

சித்தூர் மாவட்ட வனத்துறை அதிகாரி நாகார்ஜுனாரெட்டி உத்தரவின்பேரில் பாக்ராபேட்டை வனத்துறையினர் சியாமளா வனப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். தும்பகோனா என்ற இடத்தின் அருகே சென்றபோது தமிழகத்தை சேர்ந்த 5 பேர் செம்மர கட்டைகளை வெட்டிக்கொண்டிருந்தனர். அவர்களை பிடிக்க முயன்றபோது தப்பி ஓடினர். அதில் 2 பேர் மட்டும் பிடிபட்டனர். மற்ற 3 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

பிடிபட்டவர்களிடமிருந்து 5 செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் செம்மரங்கள் வெட்டும்போது அங்கு தங்கி சமைத்து சாப்பிடுவதற்காக 10 நாட்களுக்கு தேவையான சமையல் பொருட்களை வைத்திருந்தனர். அவற்றையும், அவர்கள் வைத்திருந்த பைகளையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இவற்றை பாக்ராபேட்டை வன அலுவலகத்தில் அவர்கள் ஒப்படைத்தனர். மேலும் தப்பிச் சென்ற 3 பேரையும் விரைவில் பிடிப்பதாகவும் தெரிவித்தனர். #RedSandersSmuggling

Tags:    

Similar News