செய்திகள்

கொழிஞ்சாம்பாறை அருகே பஸ் மீது கார் மோதி எம்.பி.பி.எஸ். மாணவர் பலி

Published On 2018-08-13 05:49 GMT   |   Update On 2018-08-13 05:49 GMT
கொழிஞ்சாம்பாறை அருகே பஸ் மீது கார் மோதி எம்.பி.பி.எஸ். மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை வண்ணான்மடை நீலங்காட்சியை சேர்ந்தவர் பால்ராஜ். ரைஸ் மில் அதிபர். இவரது மகன் பிரின்ஸ் வில்லியம்ஸ் (வயது 24). இவர் ஒற்றப்பாலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வந்தார்.

கல்லூரிக்கு செல்ல நீலங்காட்சியில் இருந்து காரில் புறப்பட்டார். கார் ஒற்றப்பாலம் வந்தபோத கட்டுப்பாட்டை இழுந்து எதிரே வந்த பஸ் மீது வேகமாக மோதியது. இதில் கார் நொறுங்கியது.

அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். மாணவர் பிரின்ஸ் வில்லியம்ஸ் இடிபாடுகளில் சிக்கி கிடந்தார்.

இது குறித்து ஒற்றப்பாலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து காரை வெட்டி மாணவரை மீட்டபோது அவர் இறந்து விட்டது தெரியவந்தது. உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
Tags:    

Similar News