செய்திகள்

கார்த்தி சிதம்பரத்துக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Published On 2018-08-03 12:28 GMT   |   Update On 2018-08-03 12:28 GMT
ஐஎன்எக்ஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி ஐகோர்ட் வழங்கிய ஜாமினில் தலையிட முடியாது என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இன்று தெரிவித்துள்ளனர். #KartiChidambaram #INXMediaCase
புதுடெல்லி:

கடந்த 2007 ஆம் ஆண்டு, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம், வெளிநாட்டு முதலீடு பெற அந்நிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் மூலம் அப்போது மத்திய நிதி மந்திரியாக இருந்த ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் அதற்கு கைமாறாக ரூ.305 கோடி லஞ்சம் பெற்றதாகவும் புகார் எழுந்தது.

இதைத் தொடர்ந்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அதனை எதிர்த்து சிபிஐ சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது, விசாரணை நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் மனு நிலுவையில் இருப்பதால், ஜாமீன் அளிப்பது தொடர்பான டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்ட நிலையில் டெல்லி உயர் நீதிமன்றம் மார்ச் 23-ம் தேதி அவருக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. 

ஐஎன்எக்ஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு வழங்கிய உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது  என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இன்று தெரிவித்துள்ளனர். #KartiChidambaram #INXMediaCase
Tags:    

Similar News