செய்திகள்
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது 20-ம் தேதி விவாதம்
மோடி அரசுக்கு எதிராக அளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்ட நிலையில் இதன் மீதான விவாதம் 20-ம் தேதி நடக்கிறது. #MonsoonSession #NoConfidenceMotion
புதுடெல்லி:
பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று, மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. தெலுங்குதேசம் சார்பிலும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
பசுகாவலர்கள் என்ற பெயரில் நடத்தப்படும் தாக்குதல், ஆந்திர மாநிலத்திற்கு தனி அந்தஸ்து போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சமாஜ்வாடி கட்சி மற்றும் தெலுங்குதேசம் கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் தொடங்கியது. #LokSabha #SumitraMahajan
பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று, மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. தெலுங்குதேசம் சார்பிலும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
இதனை சபாநாயகர் ஏற்றுக்கொண்டு அனுமதி அளித்துள்ளார். இந்த மசோதா மீதான விவாதம் வரும் 20-ம் தேதி (வெள்ளிகிழமை) காலை 11 மணிக்கு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது மத்திய அரசு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
பசுகாவலர்கள் என்ற பெயரில் நடத்தப்படும் தாக்குதல், ஆந்திர மாநிலத்திற்கு தனி அந்தஸ்து போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சமாஜ்வாடி கட்சி மற்றும் தெலுங்குதேசம் கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் தொடங்கியது. #LokSabha #SumitraMahajan