செய்திகள்

பெற்றோர் கடும் எதிர்ப்பு - சர்ச்சை அறிவிப்பை வாபஸ் பெற்ற பள்ளி நிர்வாகம்

Published On 2018-07-05 22:50 GMT   |   Update On 2018-07-05 22:50 GMT
பெற்றோர்களின் கடும் எதிர்ப்பால், மாணவிகள் அணிய வேண்டிய உள்ளாடையின் நிறம் மற்றும் ஆடையின் நீளம் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பன அறிவிப்பை பள்ளி நிர்வாகம் வாபஸ் பெற்றுள்ளது #PuneSchool #BizarreOrder
புனே :

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி நிர்வாகத்தில் இருந்து நேற்று முன்தினம் பெற்றோர்களுக்கு ஒரு அறிவிப்பு வந்தது.

அதில், இனி மாணவிகள் அணிய வேண்டிய உள்ளாடையின் நிறம் மற்றும் வெளியில்  அணியும் ஸ்கர்ட்டின் நீளம் உள்ளிட்ட விஷயங்கள் வலியுறுத்தப்பட்டிருந்தன.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உடனடியாக பள்ளி நிர்வாகத்திடம் புகார் செய்தனர். ஆனால் அவற்றை பள்ளி நிர்வாகம் பொருட்படுத்தவே இல்லை.

இதற்கிடையே, பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் நேரில் சென்று விசாரிக்க மாநில கல்வித்துறை துணை இயக்குநர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது, அக்குழு விசாரித்துக் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில கல்வித்துறை அமைச்சர் வினோத் தாவ்டே தெரிவித்தார்.

இந்நிலையில், பெற்றோர்களின் கடும் எதிர்ப்பால், மாணவிகள் அணிய வேண்டிய உள்ளாடையின் நிறம் மற்றும் ஆடையின் நீளம் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பான அறிவிப்பை பள்ளி நிர்வாகம் வாபஸ் பெற்றுள்ளது

பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர் போராட்டம் நடத்தினர். சமூக வலை தளங்களிலும் இந்த அறிவிப்பு குறித்து விவாதம் நடத்தினர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் தனது உத்தரவை வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.
#PuneSchool #BizarreOrder
Tags:    

Similar News