செய்திகள்

மேற்கு வங்கத்தில் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பலி

Published On 2018-06-28 08:51 GMT   |   Update On 2018-06-28 08:51 GMT
மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூர் பகுதியில் காரும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். #Accident #WestBengal
கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூர் பகுதியில் உள்ள டிகா பகுதிக்கு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார், எதிரே வந்த பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரி சாலமன் நேசகுமார், காரும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கார் ஓட்டுனர் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், படுகாயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #WestBengalAccident
Tags:    

Similar News