செய்திகள்

பீகாரில் குளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - 6 குழந்தைகள் பலி

Published On 2018-06-19 05:09 GMT   |   Update On 2018-06-19 05:09 GMT
பீகார் மாநிலத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் குளத்தில் கவிழ்ந்ததில் 6 குழந்தைகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
பாட்னா :

பிகார் மாநிலம், அராரியா மாவட்டத்தில் உள்ள தராபாடி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார், குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 குழந்தைகள் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

குளத்தில் கவிழ்ந்த காரில் இருந்து கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்ட ஒரு குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



விபத்து குறித்து தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்தடைந்த அம்மாநில போலீசார் உயிரிழந்த குழந்தைகளின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News