செய்திகள்
கணவரின் சகோதரிக்கு கிட்னியை தானமாக கேட்டதால் பெண் தற்கொலை
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் கணவரின் சகோதரிக்கு கிட்னியை தானமாக தர வலியுறுத்தியதால் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
மீரட்:
உத்தரபிரதேச மாநிலம் மீரட் டி.பி. நகரை சேர்ந்த விகாஸ்குமார். இவரது மனைவி அனு.
விகாஸ் குமாரின் சகோதரிக்கு சிறுநீரக கோளாறு இருந்தது. இதையடுத்து அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது.
இதற்காக விகாஸ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் அனுவிடம் கிட்னியை தானமாக கொடுக்க வலியுறுத்தி வந்தனர். இதற்கு அனு மறுப்பு தெரிவித்து வந்தார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் விகாஸ் குமார், அனுவின் பெற்றோருக்கு போன் செய்து தங்களது மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அனுவின் பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீசார் விகாஸ்குமார் வீட்டுக்கு சென்று பார்த்த போது அங்கு யாரும் இல்லை. அனுவின் உடலும் அங்கு இல்லை. அவரது உடலுடன் கணவர் விகாஸ்குமார் மற்றும் குடும்பத்தினர் மாயமாகி இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து அனுவின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதில், கணவரின் சகோதரிக்கு கிட்னியை தானமாக கொடுக்க அனுவை வற்புறுத்தி கொடுமை படுத்தி வந்தனர். இதனால் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து போலீசார் விகாஸ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வருகிறார்கள். #Tamilnews
உத்தரபிரதேச மாநிலம் மீரட் டி.பி. நகரை சேர்ந்த விகாஸ்குமார். இவரது மனைவி அனு.
விகாஸ் குமாரின் சகோதரிக்கு சிறுநீரக கோளாறு இருந்தது. இதையடுத்து அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது.
இதற்காக விகாஸ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் அனுவிடம் கிட்னியை தானமாக கொடுக்க வலியுறுத்தி வந்தனர். இதற்கு அனு மறுப்பு தெரிவித்து வந்தார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் விகாஸ் குமார், அனுவின் பெற்றோருக்கு போன் செய்து தங்களது மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அனுவின் பெற்றோர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீசார் விகாஸ்குமார் வீட்டுக்கு சென்று பார்த்த போது அங்கு யாரும் இல்லை. அனுவின் உடலும் அங்கு இல்லை. அவரது உடலுடன் கணவர் விகாஸ்குமார் மற்றும் குடும்பத்தினர் மாயமாகி இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து அனுவின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதில், கணவரின் சகோதரிக்கு கிட்னியை தானமாக கொடுக்க அனுவை வற்புறுத்தி கொடுமை படுத்தி வந்தனர். இதனால் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து போலீசார் விகாஸ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வருகிறார்கள். #Tamilnews