செய்திகள்

சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் சசி தரூருக்கு சம்மன் அனுப்பப்படுமா? தீர்ப்பை ஒத்திவைத்தது டெல்லி கோர்ட்

Published On 2018-05-28 10:27 GMT   |   Update On 2018-05-28 10:27 GMT
சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அவரது கணவரான சசி தரூர் எம்.பி.க்குக்கு சம்மன் அனுப்பப்படுமா? என்பது ஜூன் 5-ம் தேதி தெரியவரும். #SunandaDeathCase #ShashiTharoor
புதுடெல்லி:

காங்கிரஸ் எம்.பி. சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி டெல்லியில் தங்கியிருந்த ஓட்டல் அறையில் மர்மமாக இறந்து கிடந்தார். அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், சசி தரூர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. 

இவ்வழக்கை விசாரித்த டெல்லி போலீஸ், சுமார் 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை கடந்த 14-ம் தேதி டெல்லி கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் சசி தரூர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அவருக்கு சம்மன் அனுப்பி அவரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அவருக்கு எதிராக போதிய ஆதாரம் இருப்பதாகவும் கூறியிருந்தது.

இது தொடர்பாக கோர்ட்டில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பு மற்றும் சசி தரூர் தரப்பு வாதங்கள் இன்றுடன் நிறைவடைந்ததையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. ஜூன் 5-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி சமர் விஷால் அறிவித்துள்ளார். எனவே, சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில், சசி தரூருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிடுவாரா? என்பது ஜூன் 5-ம் தேதி தெரியவரும். #SunandaDeathCase #ShashiTharoor
Tags:    

Similar News