செய்திகள்
காவிரி விவகாரத்தில் ரஜினிகாந்துக்கு குமாரசாமி காரசார பதில்
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்துக்கு மஜத கட்சி தலைவர் குமாரசாமி காரசாரமாக பதில் அளித்துள்ளார். #Kumaraswamy #CauveryIssue #Rajinikanth
பெங்களூரு:
சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளவாறு கர்நாடகத்தில் புதிதாக அமையவுள்ள அரசு காவிரியில் இருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்துவிட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தி இருந்தார்.
இதுதொடர்பாக பெங்களூரு நகரில் மஜத கட்சி தலைவர் குமாரசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், கர்நாடக மாநிலத்தில் தேவையான தண்ணீர் இருந்தால் தமிழகத்துக்கு தரமுடியும். ரஜினிகாந்த் கர்நாடகத்துக்கு வந்து இங்குள்ள அணைகளை பார்க்க வேண்டும். எங்கள் விவசாயிகளின் நிலைமைகளை காண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
ஆனால், இங்கு வந்து அணைகளை பார்வையிட்டால் அவர் தனது நிலையை மாற்றிக் கொள்வார் என நினைக்கிறேன். அதற்கு பிறகும் ரஜினிகாந்த் தமிழகத்துக்கு தண்ணீர் தரவேண்டும் என கேட்டால் அதுதொடர்பாக பேசலாம் என தெரிவித்துள்ளார். #Kumaraswamy #CauveryIssue #Rajinikanth