செய்திகள்

கற்பழிப்பு குற்றவாளியை போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்து கொடூரமாக தாக்கிய எம்.எல்.ஏ.

Published On 2018-05-14 07:46 GMT   |   Update On 2018-05-14 07:46 GMT
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பகுதி போலீஸ் நிலையத்தில் இருந்த சிறுமி கற்பழிப்பு வழக்கில் கைதான குற்றவாளியை எம்.எல்.ஏ. கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #ChanderghatPoliceStation
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பகுதியில் உள்ள சந்தர்காட் பகுதியைச் சேர்ந்த சையத் இஸ்மால் என்பவர் கடந்த வெள்ளிகிழமை சிறுமி ஒருவரை வீட்டிற்கு அழைத்து வந்து கற்பழிக்க முயன்றார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சையத் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சந்தர்காட் போலீஸ் நிலையத்தில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், ஆல் இந்தியா மஜ்லிஸ்-இ- இடிஹத்-உல் மஸ்லிமேன் எம்.எல்.ஏ. அகமத் பாலாலா மற்றும் கட்சி உறுப்பினர்கள் இன்று போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்தனர். காவலில் இருந்த சையத்தை கொடூரமாக தாக்கினர்.

இதுகுறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இச்சம்பவம் குறித்து பேசிய எம்.எல்.ஏ. அகமத் பாலாலா, 'குற்றவாளிக்கு கண்டிப்பாக தண்டனை வழங்க வேண்டும். அவன் வெளியே வந்தால், பொதுமக்கள் கண்டிப்பாக தண்டனை வழங்குவர்' என ஆவேசமாக பேசினார். #ChanderghatPoliceStation
Tags:    

Similar News