செய்திகள்
ஏர் இந்தியா விமானத்தில் என்ஜின் கோளாறு - டெல்லியில் அவசரமாக தரையிறக்கம்
டெல்லியில் இருந்து காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு இன்று புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் என்ஜின் கோளாறு காரணமாக டெல்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. #AirIndia
புதுடெல்லி:
ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமான ஒன்று, டெல்லியில் இருந்து ஐம்மு - காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு 180 பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகளுடன் இன்று காலை 10:15 மணியளவில் புறப்பட்டது.
டெல்லியில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் என்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் டெல்லியில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. உடனடியாக கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து விமானத்தில் இருந்த 182 பயணிகள் மற்றும் சிப்பந்திகள் பத்திரமாக உயிர் தப்பினர்.
இதையடுத்து வெறு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் 180 பயணிகளும் அனுப்பி வைக்கப்பட்டனர். என்ஜின் கோளாறுக்காண காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. #AirIndia