செய்திகள்

ஏடிஎம் வாகனத்தில் இருந்து ரூ.11 லட்சம் கொள்ளை - 2 ஊழியர்கள் சுட்டுக்கொலை

Published On 2018-04-26 12:19 GMT   |   Update On 2018-04-26 12:19 GMT
புதுடெல்லியில் ஏடிஎம் வாகனத்தில் இருந்த 11 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த மர்மநபர்கள் பாதுகாவலர் மற்றும் காசாளரை சுட்டுக்கொன்றனர். #newdelhi #atmrobbery
புதுடெல்லி:

புதுடெல்லியின் மேற்குப்பகுதியில் உள்ள நரேலா நகரில் இன்று மதியம் ஏடிஎம் வேன் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்மநபர்கள் வேனை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில் வேனில் இருந்த காசாளர் மற்றும் அவருடன் பயணம் செய்த பாதுகாவலர் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.  

இதையடுத்து, கொள்ளையர்கள் 11 லட்சம் ரூபாயை திருடிச் சென்றனர். அவர்கள் தலையில் ஹெல்மட் மாட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது இப்பகுதியில் நடக்கும் இரண்டாவது சம்பவமாகும். கடந்த செவ்வாய்க்கிழமை இதே போல் இரண்டு நபர்கள் ஏடிஎம் வாகனத்தில் இருந்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் அங்கிருந்தவர்கள் வாகனத்தின் கதவை மூடியதால் கொள்ளை தடுக்கப்பட்டது.

பட்ட பகலில் மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டு பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #newdelhi #atmrobbery
Tags:    

Similar News