செய்திகள்

சோளக்கொல்லையில் 10 வயது சிறுமியின் பிணம் - கற்பழித்துக் கொலையா?

Published On 2018-04-22 09:44 GMT   |   Update On 2018-04-22 09:44 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் முசாபர்பூர் மாவட்டத்தில் இன்று கண்டெடுக்கப்பட்ட பத்து வயது சிறுமியின் மர்மப்பிணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் முசாபர்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட முசாஹரி கிராமத்தில் பத்து வயது சிறுமி மர்மமான முறையில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு இன்று தகவல் வந்தது.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் பிரேதத்தை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அந்த சிறுமி கிடந்த அலங்கோல நிலையை வைத்து பார்க்கும்போது அவர் கற்பழித்து கொல்லப்பட்டிருக்கலாம் என உள்ளூர்வாசிகள் கருதுகின்றனர். #tamilnews

Tags:    

Similar News