செய்திகள்

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு

Published On 2018-04-06 06:07 GMT   |   Update On 2018-04-06 09:01 GMT
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை மற்றும் மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #Parliament #BudgetSession

புதுடெல்லி:

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து, பி.என்.பி. வங்கி கடன் மோசடி உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கியது. அமளியை காரணம் காட்டி, அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று காலை பாராளுமன்றம் கூடியது. அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையிலும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. 

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்றுடன் நிறைவடைந்தது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் தொடர் அமளி காரணமாக அவை ஒருநாள் கூட முழுமையாக செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  #Parliament #LokSabha #RajyaSabha #BudgetSession #tamilnews
Tags:    

Similar News