செய்திகள்
ஜம்மு காஷ்மீர் எல்லை அருகே செயல்பட்டு வந்த பாகிஸ்தான் நிலையை இந்திய ராணுவம் அழித்தது
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகில் செயல்பட்டு வந்த பாகிஸ்தான் ராணுவ நிலையை இந்திய ராணுவத்தினர் இன்று அழித்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகில் செயல்பட்டு வந்த பாகிஸ்தான் ராணுவ நிலையை இந்திய ராணுவத்தினர் இன்று அழித்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகில் பாகிஸ்தான் ராணுவ மையம் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், பூஞ்ச் மாவட்டத்தின் மென்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று மாலை அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவத்தினரும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ நிலை முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது. பாதிப்பு விவரங்கள் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை என பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகில் செயல்பட்டு வந்த பாகிஸ்தான் ராணுவ நிலையை இந்திய ராணுவத்தினர் இன்று அழித்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகில் பாகிஸ்தான் ராணுவ மையம் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், பூஞ்ச் மாவட்டத்தின் மென்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று மாலை அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவத்தினரும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ நிலை முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது. பாதிப்பு விவரங்கள் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை என பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.