செய்திகள்

கத்தரிக்கோல் தராததால் கடுப்பாகி அதிகாரிகளை வறுத்தெடுத்த முரளி மனோகர் ஜோஷி

Published On 2018-02-22 10:42 GMT   |   Update On 2018-02-22 10:42 GMT
ரிப்பன் வெட்ட கத்தரிக்கோல் தராததால் கடுப்பான பா.ஜ.க மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி அதிகாரிகளை வார்த்தைகளால் வறுத்தெடுத்தார்.
லக்னோ:

பா.ஜ.க மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷி கான்பூர் தொகுதி எம்.பி.யாக உள்ளார். இந்நிலையில், கான்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சோலார் விளக்குகளை தொடங்கி வைக்க அவர் அழைக்கப்பட்டிருந்தார். மின் கம்பம் முன்னர் கலர் ரிப்பன் கட்டப்பட்டு இருந்தது.

முரளி மனோகர் ஜோஷி வந்து நீண்ட நேரமாகியும் ரிப்பன் வெட்ட கத்தரிக்கோல் தரப்படவில்லை. இதனால், கடுப்பான அவர் ரிப்பனை கையால் கிழித்து கீழே போட்டார். மேலும், அங்கிருந்த கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை வார்த்தைகளால் வறுத்தெடுத்தார்.

சிறிது நேரத்திற்கு பின்னர், கத்தரிக்கோல் கொண்டு வரப்பட்டு ரிப்பன் மீண்டும் கட்டப்பட்டது. ஆனால், ஆத்திரம் தீராததால் அவர் அதிகாரிகளை திட்டியபடியே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். #TamilNews
Tags:    

Similar News