செய்திகள்

வங்கிகளில் தொடரும் மோசடிகள் - எல்லா சிக்கலும் தீர கோவிலில் சிறப்பு பிராத்தனை

Published On 2018-02-20 11:44 GMT   |   Update On 2018-02-20 11:44 GMT
நிரவ் மோடி மற்றும் விக்ரம் கோத்தாரி ஆகிய தொழிலதிபர்கள் வங்கிகளில் மோசடி செய்துள்ள நிலையில், வங்கிச்சிக்கல்கள் தீர தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கோவிலில் சிறப்பு பூஜை, பிராத்தனை நடந்துள்ளது. #PNBScam
ஐதராபாத்:

குஜராத் தொழிலதிபர் நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துவிட்டு தப்பியோடிவிட்டார். ரோட்டோமேக் பேனா நிறுவனத்தின் நிறுவனர் விக்ரம் கோத்தாரி பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் சுமார் 800 கோடி ரூபாய் கடன் பெற்று தலைமறைவாகி விட்டார்.

நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த பிரச்சனைகள் தீர வேண்டும் என தெலுங்கானா மாநிலத்தில் சிறப்பு பூஜைகள் நடந்துள்ளன. ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள சில்குர் பாலாஜி கோவிலில் ‘சக்ராபாஜா மதாலா அர்ச்சனா’ என்ற சிறப்பு பூஜைகள் நடந்துள்ளன.

வங்கிகளில் நிலவி வரும் பிரச்சனைகள் சுமூக தீர வேண்டி சிறப்பு பூஜை நடந்துள்ளதாக தலைமை பூசாரி சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். #PNBScam #PNBFraudCase #TamilNews
Tags:    

Similar News