செய்திகள்

உ.பி.: சாலையோர டீக்கடையில் ராகுல் காந்தி திடீர் விஜயம்

Published On 2018-01-15 10:44 GMT   |   Update On 2018-01-15 10:44 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சாலையோர டீக்கடை ஒன்றில் திடீர் விஜயம் செய்தார். #rahulgandhi
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பாராளுமன்ற தொகுதியான அமேதிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று முதல் முறையாக செல்கிறார். லக்னோ விமான நிலையத்துக்கு வந்த ராகுல் காந்தியை தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வரவேற்றனர். 

லக்னோவில் இருந்து ரே பரேலி நோக்கி ராகுல் காந்தி காரில் பயணம் செய்தார். அப்போது, லக்னோ- ரேபரேலி எல்லையில் அமைந்துள்ள டீக்கடை ஒன்றில் காரை நிறுத்துமாறு ராகுல் காந்தி கூறினார். அதன்பின்ன, காரில் இருந்து கீழே இறங்கிய ராகுல், அங்கிருந்த பெஞ்ச்சில் அமர்ந்து டீ ஆர்டர் செய்து நிதானமாக குடித்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சாலையோர டீக்கடையில் நிதானமாக டீ சாப்பிட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. செய்தியாளர்கள், புகைப்படக்காரர்களுக்கு தேவையான ஒத்துழைப்பு தந்தார். டீ குடித்து முடிந்ததும் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

இதுதொடர்பாக, டீக்கடைக்காரர் ஸ்ரீராம் பால் கூறுகையில், எத்தனை பெரிய தலைவர் இத்தனை சிறிய கடையில் டீ குடித்திருக்கிறார். இதனால் நான் அடைந்த சந்தோஷத்தை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே வரவில்லை என மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். #rahulgandhi #tamilnews
Tags:    

Similar News