செய்திகள்

பிராமனர்களுக்கு எதிராக கருத்து - ஒடிசா மந்திரி அதிரடி நீக்கம்

Published On 2017-12-22 15:27 GMT   |   Update On 2017-12-22 15:27 GMT
பிராமனர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த ஒடிசா விவசாயத்துறை மந்திரியை பதவியில் இருந்து நீக்கி முதல் மந்திரி நவீன் பட்நாயக் இன்று உத்தரவிட்டுள்ளார்.
புவனேஸ்வர்:

ஒடிசா மாநில மந்திரிசபையில் விவசாயத்துறை மந்திரியாக பதவி வகிக்கும் தாமோதர் ரவுட் கடந்த திங்கட்கிழமை மல்காங்கிரி மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.

தனது பேச்சுக்கு இடையில் பழங்குடியன மக்களை பெருமைப்படுத்தும் விதமாக குறிப்பிட்ட இவர், எந்த சூழ்நிலையிலும் பழங்கிடியின மக்கள் பிச்சை எடுக்க மாட்டர்கள் என்று குறிப்பிட்டார். மாறாக, தேவை ஏற்பட்டால் பிராமணர்கள் பிச்சைகூட எடுப்பார்கள் என இவர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.



இந்நிலையில், விவசாயத்துறை மந்திரி பதவியில் இருந்து தாமோதர் ரவுட்-டை நீக்கம் செய்து முதல் மந்திரி நவீன் பட்நாயக் இன்றிரவு உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News