செய்திகள்

ஒடிசா: ஆட்டோ-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பலி

Published On 2017-12-13 09:31 GMT   |   Update On 2017-12-13 09:31 GMT
ஒடிசா மாநிலம் கியோஞ்சார் மாவட்டத்தில் ஆட்டோ-லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.
புவனேஷ்வர்:

ஒடிசா மாநிலம் கியோஞ்சார் மாவட்டத்தில் இன்று ஆட்டோ - லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. ஆட்டோவானது தன்லா கிராமத்திலிருந்து சில தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு கியோஞ்சார் மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது.



இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஆட்டோவிலிருந்த 6 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காயமடைந்தவர்களின் நிலைமை மோசமாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். விபத்து குறித்துவழக்குப்பதிவு செய்து  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News