search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோதி விபத்து"

    • இந்த பயங்கர விபத்தில் பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்த கார், பைக் உள்ளிட்ட பல வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின
    • தண்ணீரில் தத்தளிக்கும் பலரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில், பால்டிமோர் பாலம் உள்ளது. இந்த பாலம் 2.6 கி.மீ நீளம் கொண்டது. இந்நிலையில் நள்ளிரவு 1.30 மணிக்கு இந்த பெரிய பாலத்தின் அடியில் சரக்கு கப்பல் ஒன்று துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    அப்போது திடீரென சரக்கு கப்பல் பாலத்தின் மீது மோதியது. இதில் பால்டிமோர் பாலம் நொறுங்கி விழுந்தது. இந்த பயங்கர விபத்தில் பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்த கார், பைக் உள்ளிட்ட பல வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின

    தண்ணீரில் தத்தளிக்கும் பலரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதேநேரம், பலி எண்ணிக்கை குறித்த முழு விவரம் இன்னும் தெரிய வில்லை.  அங்கு மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.




    அமெரிக்காவில் பெரிய பாலம் இடிந்து உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாலம் இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் வாகன போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    https://www.instagram.com/reel/C4-IEy-JoWP/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

    • சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்தது.
    • அரசு பஸ் லாரியின் பின்பக்கம் வேகமாக மோதியது.

    திண்டிவனம், செப்.30-

    ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சோப்பு தயாரிக்க பயன்படுத்தும் 31 ஆயிரம் லிட்டர் சல்பரிக் ஆசிட் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புதுச்சேரி மாநிலம் திருபுவனை பகுதியில் உள்ள சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்தது. அந்த லாரி இன்று காலை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது லாரியின் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்துக் குள்ளானதால் லாரி டிரைவர் அறிவழகன் லாரியை சாலையோரம் நிறுத்தியுள்ளார்.

    அப்போது லாரியின் பின்னால் வந்த அரசு பஸ் லாரியின் பின்பக்கம் வேகமாக மோதியது. இந்த விபத்தில் லாரியிலிருந்து சல்பரிக் ஆசிட் பீறிட்டு அடித்து சிறிது நேரத்தில் சாலை முழுவதும் பரவியது. இந்த சம்பவம் குறித்து அறிந்த ஒலக்கூர் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் லாரியில் இருந்த சல்பரிக் ஆசிட்டை அருகில் இருந்த வாய்க்காலில் திறந்து விட்டனர்.

    தொடர்ந்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் லாரி சாலையோரமாக அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சரிசெய்யப்பட்டது. இந்த விபத்து காரணமாக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் ஆசிட் ரோட்டில் ஊற்றியதால் பொதுமக்களுக்கு சில பேருக்கு கண் எரிச்சல் மற்றும் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போக்குவரத்து பாதிப்பு
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் இருந்து சென்னை நோக்கி நேற்று இரவு கன்டெய்னர் லாரி ஒன்று வந்தது . இந்த லாரி ராணிப்பேட்டை ஆட்டோ நகர் பகுதியை கடந்து செல்லும் போது குறுக்கே சாலையை கடக்க முயன்றது. அப்போது மற்றொரு மினி லாரி மீது திடீரென மோதியது.

    இதில் மினி லாரி சாலை தடுப்பின் மீது மோதி நின்றது. இதனால் சாலையின் இரு புறங்களிலும் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. விபத்து தொடர்பாக ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாழைதார் லோடு ஏற்றிக்கொண்டு மினி லாரி நள்ளிரவு 12 மணிக்கு சேலம் மாவட்டம் வழியாக சென்று கொண்டிருந்தது.
    • தொப்பூர்-வெள்ளாறு செல்லும் வழியில் உள்ள சின்னம்கம்மம்பட்டியில் மினிலாரி சென்றபோது மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    மேட்டூர்:

    ஈேராடு மாவட்டம் அந்தியூரில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு வாழைதார் லோடு ஏற்றிக்கொண்டு மினி லாரி நள்ளிரவு 12 மணிக்கு சேலம் மாவட்டம் வழியாக சென்று கொண்டிருந்தது.

    அப்போது சேலம் மாவட்டம் தாரமஙகலம் அருகே உள்ள செலவடை பகுதிைய சேர்ந்த வல்லரசு (23), கார்த்திக் (26) ஆகிய 2 பேரும் கிருஷ்ணகிரியில் இருந்து ஊருக்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிந்தனர்.

    தொப்பூர்-வெள்ளாறு செல்லும் வழியில் உள்ள சின்னம்கம்மம்பட்டியில் மினிலாரி சென்றபோது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான வல்லரசு, கார்த்திக் ஆகியோர் உடல்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் முத்துசாமி (46) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டெம்போ வேன் ரோட்டோரம் இருந்த மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
    • இதுகுறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் பர்கூர் வழியாக மைசூருக்கு செல்லக்கூடிய பிரதான சாலை அமைந்துள்ளது.

    இந்த வழியாக கர்நாடகா மாநிலத்துக்கு செல்ல குறைந்த தூரம் என்பதாலும், 2 கொண்டை ஊசி வளைவுகள் மட்டுமே இருப்பதாலும் பெரு ம்பாலான வாகன ஓட்டிகள் இந்த வழியாக சென்று வருகிறார்கள்.

    தற்போது சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு இருப்பதால் வாகன ஓட்டிகள் அதிக அளவில் இந்த பாதையை பயன்படுத்தி வருகின்றனர் .

    இந்த நிலையில் கர்நாடக மாநிலம் ராமாபுரத்தில் இருந்து தவிடு பாரம் ஏற்றி கொண்டு ஒரு டெம்போ வேன் பெருந்துறையில் தவுடுகளை இறக்குவதற்காக பர்கூர் வனப்பகுதி வழியாக வந்து கொண்டிருந்தது.

    அப்போது வேலாம்பட்டி பிரிவு என்ற இடத்தில் வந்து கொண்டு இருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென டெம்போ வேன் ரோட்டோரம் இருந்த மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.

    இதில் டெம்போ வேனில் வந்த கர்நாடக மாநிலம் அம்பிகாபுரம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் அமிர்தலிங்கம் (33) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கிளீனர் கார்த்தி (22) ஆகியோர் லேசான காயத்துடன் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

    இது குறித்து பர்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சப் -இன்ஸ்பெக்டர் தனபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவர்களை ஆம்புலன்சு மூலம் மீட்டு பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    • கோபிசெட்டிபாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது.
    • கார் மற்றும் வேன் திடீரென நேருக்கு நேர் மோதி கொண்டது.

    கோபி:

    ஈரோடு முதல் கோபிசெட்டிபாளையம் வழியாக சத்தியமங்கலம் வரை சாலை விரிவாக்கம் பணி நடந்து வருகிறது.

    இதனால் கோபிசெட்டிபாளையம் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை கோபிசெட்டிபாளையம் அடுத்த கரட்டூர் ஆர்ச் பகுதியில் ஒரு காரில் 3 பேர் வந்து கொண்டு இருந்தனர்.

    அந்த வழியாக எதிரே ஒரு வேன் வந்தது. அப்போது கார் மற்றும் வேன் எதிர்பாராதவிதமாக திடீரென நேருக்கு நேர் மோதி கொண்டது.

    இதில் கார் மற்றும் வேனின் முன் பகுதி சேதமானது.

    இதில் காரில வந்த 3 பேரும் காயமின்றி தப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×