search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "collision accident"

    • சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்தது.
    • அரசு பஸ் லாரியின் பின்பக்கம் வேகமாக மோதியது.

    திண்டிவனம், செப்.30-

    ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சோப்பு தயாரிக்க பயன்படுத்தும் 31 ஆயிரம் லிட்டர் சல்பரிக் ஆசிட் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புதுச்சேரி மாநிலம் திருபுவனை பகுதியில் உள்ள சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்தது. அந்த லாரி இன்று காலை விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது லாரியின் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் விபத்துக் குள்ளானதால் லாரி டிரைவர் அறிவழகன் லாரியை சாலையோரம் நிறுத்தியுள்ளார்.

    அப்போது லாரியின் பின்னால் வந்த அரசு பஸ் லாரியின் பின்பக்கம் வேகமாக மோதியது. இந்த விபத்தில் லாரியிலிருந்து சல்பரிக் ஆசிட் பீறிட்டு அடித்து சிறிது நேரத்தில் சாலை முழுவதும் பரவியது. இந்த சம்பவம் குறித்து அறிந்த ஒலக்கூர் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் லாரியில் இருந்த சல்பரிக் ஆசிட்டை அருகில் இருந்த வாய்க்காலில் திறந்து விட்டனர்.

    தொடர்ந்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் லாரி சாலையோரமாக அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சரிசெய்யப்பட்டது. இந்த விபத்து காரணமாக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் ஆசிட் ரோட்டில் ஊற்றியதால் பொதுமக்களுக்கு சில பேருக்கு கண் எரிச்சல் மற்றும் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போக்குவரத்து பாதிப்பு
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் இருந்து சென்னை நோக்கி நேற்று இரவு கன்டெய்னர் லாரி ஒன்று வந்தது . இந்த லாரி ராணிப்பேட்டை ஆட்டோ நகர் பகுதியை கடந்து செல்லும் போது குறுக்கே சாலையை கடக்க முயன்றது. அப்போது மற்றொரு மினி லாரி மீது திடீரென மோதியது.

    இதில் மினி லாரி சாலை தடுப்பின் மீது மோதி நின்றது. இதனால் சாலையின் இரு புறங்களிலும் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. விபத்து தொடர்பாக ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோபிசெட்டிபாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது.
    • கார் மற்றும் வேன் திடீரென நேருக்கு நேர் மோதி கொண்டது.

    கோபி:

    ஈரோடு முதல் கோபிசெட்டிபாளையம் வழியாக சத்தியமங்கலம் வரை சாலை விரிவாக்கம் பணி நடந்து வருகிறது.

    இதனால் கோபிசெட்டிபாளையம் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை கோபிசெட்டிபாளையம் அடுத்த கரட்டூர் ஆர்ச் பகுதியில் ஒரு காரில் 3 பேர் வந்து கொண்டு இருந்தனர்.

    அந்த வழியாக எதிரே ஒரு வேன் வந்தது. அப்போது கார் மற்றும் வேன் எதிர்பாராதவிதமாக திடீரென நேருக்கு நேர் மோதி கொண்டது.

    இதில் கார் மற்றும் வேனின் முன் பகுதி சேதமானது.

    இதில் காரில வந்த 3 பேரும் காயமின்றி தப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×