search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 லாரிகள் மோதி விபத்து
    X

    2 லாரிகள் மோதி விபத்து

    • போக்குவரத்து பாதிப்பு
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் இருந்து சென்னை நோக்கி நேற்று இரவு கன்டெய்னர் லாரி ஒன்று வந்தது . இந்த லாரி ராணிப்பேட்டை ஆட்டோ நகர் பகுதியை கடந்து செல்லும் போது குறுக்கே சாலையை கடக்க முயன்றது. அப்போது மற்றொரு மினி லாரி மீது திடீரென மோதியது.

    இதில் மினி லாரி சாலை தடுப்பின் மீது மோதி நின்றது. இதனால் சாலையின் இரு புறங்களிலும் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. விபத்து தொடர்பாக ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×