search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார்-வேன் மோதி விபத்து; 3 பேர் தப்பினர்
    X

    கார்-வேன் மோதி விபத்து; 3 பேர் தப்பினர்

    • கோபிசெட்டிபாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது.
    • கார் மற்றும் வேன் திடீரென நேருக்கு நேர் மோதி கொண்டது.

    கோபி:

    ஈரோடு முதல் கோபிசெட்டிபாளையம் வழியாக சத்தியமங்கலம் வரை சாலை விரிவாக்கம் பணி நடந்து வருகிறது.

    இதனால் கோபிசெட்டிபாளையம் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை கோபிசெட்டிபாளையம் அடுத்த கரட்டூர் ஆர்ச் பகுதியில் ஒரு காரில் 3 பேர் வந்து கொண்டு இருந்தனர்.

    அந்த வழியாக எதிரே ஒரு வேன் வந்தது. அப்போது கார் மற்றும் வேன் எதிர்பாராதவிதமாக திடீரென நேருக்கு நேர் மோதி கொண்டது.

    இதில் கார் மற்றும் வேனின் முன் பகுதி சேதமானது.

    இதில் காரில வந்த 3 பேரும் காயமின்றி தப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×