செய்திகள்

சத்தீஸ்கரில் காதலனை தாக்கி இளம் பெண்ணை கற்பழித்த போலீஸ்காரர்கள் கைது

Published On 2017-12-12 05:24 GMT   |   Update On 2017-12-12 05:25 GMT
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் காதலனை தாக்கி விட்டு இளம் பெண்ணை 2 போலீஸ்காரர்கள் கற்பழித்தனர்.
ராய்ப்பூர்:

ராய்ப்பூரில் உள்ள விதான் சபா பகுதியில் 20 வயது இளம்பெண் தனது காதலனுடன் மறைவிடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது போலீஸ்காரர்கள் ஹீராலால் நிர்மல்கர், திகாராம் தாரக் ஆகிய 2 பேர் அங்கு வந்தனர்.

இளம் பெண்ணையும், அவரது காதலரையும் தனி இடத்துக்கு அழைத்து சென்று மிரட்டினர். போலீஸ்காரர் திகாராம் பெண்ணின் காதலரை அடித்து உதைத்தார். பின்னர் அவர்களை தனி இடத்துக்கு இழுத்து சென்றனர். அங்கு வைத்து போலீஸ்காரர்கள் 2 பேரும் இளம் பெண்ணை கற்பழித்தனர்.

மேலும் போலீஸ்காரர்கள் இருவரும் பெண்ணையும் அவரது காதலரையும் மிரட்டி ரூ.15 ஆயிரம் பறித்தனர். இத்துடன் விடாமல் போலீஸ்காரர் ஹீராலால் செல்போன் மூலம் பெண்ணிடம் மேலும் ரூ.5 ஆயிரம் கேட்டு தொந்தரவு செய்து கொண்டிருந்தார்.

அவரது தொல்லை பொறுக்க முடியாத பெண், போலீஸ்காரரின் பேச்சை செல்போனில் ‘பதிவு’ செய்து அதை ஆதாரமாக வைத்து உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் செய்தார். இதையடுத்து 2 போலீஸ்காரர்களும் கைது செய்யப்பட்டனர். தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
Tags:    

Similar News