செய்திகள்
கோப்புப்படம்

சிம்லா அருகே நிலச்சரிவில் கார் சிக்கி 6 பேர் பலி

Published On 2017-12-11 08:41 GMT   |   Update On 2017-12-11 08:41 GMT
இமாச்சலப்பிரதேசம் தலைநகர் சிம்லா அருகே நிலச்சரிவினால் பள்ளத்தில் கவிழ்ந்த காருக்குள் சிக்கி குழந்தைகள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிம்லா:

இமாச்சலப்பிரதேசம் தலைநகர் சிம்லா அருகே நிலச்சரிவினால் பள்ளத்தில் கவிழ்ந்த காருக்குள் சிக்கி குழந்தைகள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இமாச்சலப்பிரதேசம் குலு மாவட்டத்துக்குட்பட்ட ராம்பூர் வழியாக நார்மன்ட் சாலை மலைப்பாதையில் நேற்றிரவு சென்று கொண்டிருந்த ஒரு கார் திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவால் பாதையை விட்டு விலகி அருகாமையில் உள்ள பள்ளத்துக்குள் கவிழ்ந்தது.

இதுதொடர்பாக, இன்று காலை கிடைத்த தகவலின்படி சம்பவத்துக்கு விரைந்துவந்த குலு மாவட்ட வட்டாட்சியர் தலைமையிலான மீட்புப் படையினர் பள்ளத்தில் சிக்கி இறந்து கிடந்த ஒரு பெண், குழந்தைகள் உள்பட ஆறு பிரேதங்களை மீட்டனர்.
Tags:    

Similar News