செய்திகள் (Tamil News)
தெலுங்கானா: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சாலை விபத்தில் பலி
தெலுங்கானா மாநிலத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம் மகபுபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த நல்ல சீனிவாச ரெட்டி உள்பட அவரது குடும்பத்தினர் நான்கு பேர் ஒரு திருமண விழாவுக்குச் சென்று விட்டு தங்களது வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். மாதேடு என்ற கிராமத்தின் அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது சாலை வளைவில் திரும்பியது.
அப்போது, லாரி ஒன்றை முந்திச்சென்ற காரானது எதிரே வந்த மற்றொரு லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் நால்வரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் மகபுபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த நல்ல சீனிவாச ரெட்டி உள்பட அவரது குடும்பத்தினர் நான்கு பேர் ஒரு திருமண விழாவுக்குச் சென்று விட்டு தங்களது வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். மாதேடு என்ற கிராமத்தின் அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது சாலை வளைவில் திரும்பியது.
அப்போது, லாரி ஒன்றை முந்திச்சென்ற காரானது எதிரே வந்த மற்றொரு லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் நால்வரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.