செய்திகள்

துப்பாக்கி வெடித்து திருமணத்தை கொண்டாடிய உறவினர்கள் - 8 வயது சிறுவன் பலி

Published On 2017-11-20 07:09 GMT   |   Update On 2017-11-20 07:09 GMT
பஞ்சாப் மாகாணத்தில் திருமண நிகழ்ச்சியை துப்பாக்கியால் சுட்டு கொண்டாடிய போது எதிர்பாராத விதமாக 8 வயது சிறுவன் பலியாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காந்திநகர்:

பஞ்சாப் மாநிலம் பரித்கோட் மாவட்டத்தில் உள்ள கோட்கபுரா நகரில் பிக்ரம்ஜித் சிங் என்பவருக்கு திருமண விழா நடைபெற்று கொண்டிருந்தது. திருமணத்திற்கு முன் தினம் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது துப்பாக்கியால் சுட்டு ஆனந்தத்தை கொண்டாடுவர்.


இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு கொண்டாடிய போது துப்பாக்கி குண்டு தவறுதலாக 8 வயது சிறுவன் விக்ரம்ஜித் சிங் மேல் பாய்ந்தது. இதில் அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் 3 வயது சிறுமி படுகாயமடைந்தார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. துப்பாக்கியால் சுட்ட மணமகனின் உறவினர் பல்விந்தர் சிங்கை போலீசார் கைது செய்தனர். மேலும் துப்பாக்கியால் சுட்ட சிலரை கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

வட மாநிலங்களில் இது போன்ற பல துயரச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. போலீசார் இதற்கு தடை விதித்தாலும் அதையும் மீறி மக்கள் துப்பாக்கிகளை திருமண நிகழ்ச்சிகளில் பயன்படுத்துகின்றனர்.

திருமண நிகழ்ச்சி கொண்டாட்டத்தின்  போது எதிர்பாராத விதமாக 8 வயது சிறுவன் பலியாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News