செய்திகள்
ஜம்மு-காஷ்மீர்: போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் ஹிஸ்புல் முஜாகிதின் தீவிரவாதி கைது
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்ட போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் ஹிஸ்புல் முஜாகிதின் தீவிரவாதியை கைது செய்தனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, போலீசார் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த சவுகத் அகமது லோனி என்பவரை மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து ஒரு பிஸ்டல் மற்றும் துப்பாக்கி குண்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். விசாரணையில், அந்த நபர் ஹிஸ்புல் முஜாகிதின் இயக்கத்தை சேர்ந்தவன் என தெரிய வந்தது.
மேலும், பாதுகாப்பு படையினரிடம் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை பறித்து வரும் வேலையை கமாண்டர் ரியாஸ் நைக்கூ வழங்கியதாகத் தெரிவித்தான். இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.