செய்திகள்

காஷ்மீர்: தீவிரவாதிகள் தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் பலி

Published On 2017-11-06 15:45 GMT   |   Update On 2017-11-06 15:45 GMT
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் ஒரு வீரர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் ஒரு வீரர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அக்லர் கண்டி என்ற பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது. இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற வீரர்கள் தீவிரவாதிகளை சுற்றி வளைத்தனர்.

பாதுகாப்பு படை வீரர்கள் - தீவிரவாதிகள் சில மணிநேரங்கள் நீடித்த இந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு வீரர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அங்குள்ள பொதுமக்களில் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீவிரவாதிகள் மீதான என்கவுண்டர் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags:    

Similar News